Saturday, October 13, 2018

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறையும்?

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.(24 Hour New News)



எனினும் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி  33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(24 Hour New News)

79.80 அமெரிக்க டொலராக  காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் நேற்று 80.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.(24 Hour New News)

வார இறுதியில் மசகு எண்ணெய்யின் விலை 4.2 வீதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
(24 Hour New News)

இதேவேளை எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுமாயின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(24 Hour New News)

Thursday, October 11, 2018

சைட்டம் மாணவியை பதிவு செய்யாத மருத்துவ சபைக்கு அழைப்பாணை

சைட்டம் மாணவியை பதிவு செய்யாத மருத்துவ சபைக்கு அழைப்பாணை



 சைட்டம் (SAITM) மருத்துவ மாணவி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மருத்துவ சபை நடைமுறைப்படுத்தாமைக்காக அம்மாணவி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.(24HourNewNews)

சைட்டம் மருத்துவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட மாணவியை பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையால், நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நவம்பர்
16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று மருத்துவ சபைக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.(24HourNewNews)

2016 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருந்த நிலையில்,(24HourNewNews)


தம்மை மருத்துவ சபையில் பதிவு செய்யாமை குறித்து தில்மா கசுன்தா சூரியஆரச்சி மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.(24HourNewNews)

நண்பர்களுடன் பகிரவும்.

Wednesday, October 10, 2018

சுப்பர் டீசல், பெட்ரோலின் விலை மீண்டும் அதிகரிப்பு.

சுப்பர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகள் இன்று மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.(24 Hour New News )



149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.(24 Hour New News )

இதற்கமைய, 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 155 ரூபாவாக அமைந்துள்ளது.(24 Hour New News )

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.(24 Hour New News )

சுப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாகும்.(24 Hour New News )

இதற்கமைய, 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலையும் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.(24 Hour New News )

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, ஓட்டோ டீசல் விலையை அதிகரிக்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.(24 Hour New News )

நண்பர்களுடன் பகிரவும்....

Tuesday, October 9, 2018

இலங்கை – சீஷெல்ஸ் இடையே இரு உடன்படிக்கைகள் கைச்சாத்து

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி(24 Hour New News )

 மைத்திரிபால சிறிசேன, இன்று (09) அந்நாட்டின் உப ஜனாதிபதி வின்ஸ்டன்ட் மெரிடன்ட்டை (Vincent Meriton) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.(24 Hour New News )

இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.(24 Hour New News )

அதேநேரம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.(24 Hour New News )

சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி ஃபோவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் செய்துள்ளார்.
(24 Hour New News )

சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்நாட்டு ஜனாதிபதி டெனீ போவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (08) நடைபெற்றது.



இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு மற்றும் வலய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சீஷெல்சுக்கு போதைப்பொருள் நிவாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சீஷெல்ஸ் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.

அத்துடன், தமது நாட்டு இராணுவத்தினருக்கு இலங்கையில் பயிற்சியளிக்குமாறும் சீஷெல்ஸ் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து விரைவில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீஷெல்ஸ் மாணவர்களுக்கு தொழில்பயிற்சிக்காக வருடாந்தம் 10 புலமைப்பரிசிலை வழங்குவதற்கு இணங்கியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், தகவல் தொழில்சுட்ட ஒத்துழைப்பு மற்றும் தொழில் பயிற்சித் துறை தொடர்பான இரண்டு இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாதிடப்பட்டன.

(24 Hour New News )

நண்பர்களுடன் பகிரவும்

Monday, October 8, 2018

வானிலை அவதான நிலையம் சற்றுமுன் பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு (காணொளி)

தென்கிழக்கு  வங்காளவிரிகுடாவில் நிகழும்  வளிமண்டல குழப்பநிலை தற்போதைய நிலையில் குறைந்த காற்றழுத்தமாக மாறியுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் நிலவும் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை  எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.( 24 Hour New News )



 அதன்படி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல் , வடமேல் , மத்திய , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த  நிலையம் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )


இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மணிக்கு 80km வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்  என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )


வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )

மேலதிக விபரங்களுக்கு காணொளியில்
https://youtu.be/OBISUWZWeA8

 ( 24 Hour New News )

நண்பர்களுடன் பகிரவும்

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துபவரா? நீங்கள்

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதால் பாதிப்பு – சுகாதார அமைச்சு
     

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.( 24HourNewNews)

படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால், மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
( 24HourNewNews)

உறங்கச்செல்வதற்கு முன்னர், படுக்கையறையில் இருந்து அவ்வாறான பொருட்களை அகற்றுமாறும் அல்லது செயலிழக்க செய்யுமாறும் பாவனையாளர்களை சுகாதாரப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.( 24HourNewNews)

உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.( 24HourNewNews)

அத்துடன், நீண்டநேரம் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதும் உடல் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல அல்ல இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.( 24HourNewNews)

நண்பர்களுடன் பகிரவும்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.( 24 Hour New News)



பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.( 24 Hour New News)

1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.( 24 Hour New News)

2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய (05) தினம் வௌியிடப்பட்டன.( 24 Hour New News)

Friday, October 5, 2018

ஆசியாக் கிண்ணம் ; இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.( 24 Hour New News )



ஆப்கானிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்திய இலங்கை இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (07) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.( 24 Hour New News )

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெறுகிறது.
இதன் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடின.( 24 Hour New News )

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.( 24 Hour New News )

அணித்தலைவர் நுவனிது பெர்னாண்டோ 129 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.( 24 Hour New News )

பந்து வீச்சில் அப்துல் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.( 24 Hour New News )

210 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 48 .3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களையே பெற முடிந்தது.( 24 Hour New News )

பந்து வீச்சில் சசிக டுல்ஷான் 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.( 24 Hour New News )

ஞானசார தேரரின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (05) நிராகரித்துள்ளது.(24 Hour New News)



இன்று (05) இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.(24 Hour New News)

குறித்த மனு மூன்று நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை தீர்மானத்தின்படி நிராகரிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.(24 Hour New News)

நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.(24 Hour New News)

இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஞானசார தேரரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.(24 Hour New News)

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஞானசார தேரரால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.(24 Hour New News)

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.(24 Hour New News)

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது.(24 Hour New News)

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இன்று

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.(24 Hour New News )



கொழும்பு பகுதியிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (05) நண்பகல் பரீட்சைகள் திணைக்களத்தில் இந்த பெறுபேறுகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலிடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.(24 Hour New News )

இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(24 Hour New News )

இம்முறை 355326 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  • கீழே உள்ள link இனூடாக சென்று பார்வையிடலாம்


ttps://www.doenets.lk/result/gvresult.jsf?

(24 Hour New News )

Thursday, October 4, 2018

இந்தோனேசிய பூகம்பம் சுனாமி அனர்த்தம்: பலியானோர் தொகை 1571 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் இரட்டைப் பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளதோடு உயிர் பிழைத்தோரை தேடும்பணி, அனர்த்தம் ஏற்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் மீட்புப் பணியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.( 24 Hour New News )




  1. இறந்தோரின் எண்ணிக்கை 1571 எனவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், 70,000 இற்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்தோனேசிய அனர்த்த முகவரகப் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரேஹோ புதன்கிழமையன்று தெரிவித்தார்.( 24 Hour New News )


நேரடியாகப் பாதிக்கப்பட்ட சுலாவெசி தீவிலுள்ள பலு நகரை அண்டிய பகுதிகளுக்கு உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் வந்தடைவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு பெருமளவில் தேவைகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.( 24 Hour New News )

வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற 7.5 ரிச்டர் அளவான பூகம்பம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற சுனாமியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 200,000 பேருக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம், இவர்களுள் ஏராளமான சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும், 66,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.( 24 Hour New News )

வடக்கு, கிழக்கு மக்களுக்கு சட்டப்பூர்வமாக சொந்தமான காணிகளை கட்டாயமாகக் கையளிக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு சட்டப்பூர்வமாக சொந்தமான காணிகளை கட்டாயமாக அந்த மக்களிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.( 24 Hour New News )



இதற்கமைய காணி விடுவிப்பு நடவடிக்கையினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.( 24 Hour New News )

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியது.( 24 Hour New News )

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.( 24 Hour New News )

அக்கரைப்பற்றில் நீர வளம் உகந்த அளவில் இருந்தாலும் முறையான விநியோகக் கட்டமைப்பு இன்மையால் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.( 24 Hour New News )

மடு புனித பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் இழந்த அபிவிருத்தியின் நற்பலனை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க அனைவரும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.( 24 Hour New News )

Tuesday, October 2, 2018

மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

நாளை காலை 6 மணிவரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.( 24 HOUR NEW NEWS )



மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையிலுமுள்ள கடற்பிராந்தியங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.( 24 HOUR NEW NEWS )

இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.( 24 HOUR NEW NEWS )

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடலலை 4 முதல் 6 அடி வரை மீற்றர் உயரக்கூடும் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார்.( 24 HOUR NEW NEWS )

இதனையடுத்து, நாளை காலை 6 மணிவரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளூடாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பத்மசிறி திசேரா மேலும் கூறியுள்ளார்.( 24 HOUR NEW NEWS )

சகல வசதிகளுடனும் கூடிய 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் நாடுமுழுவதும் – பிரதமர்

அனைத்து வசதிகளுடனும் கூடிய 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளில் நிர்மாணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.( 24 Hour New News)



அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்கும் வகையில் அடுத்த மூன்று வருடங்களில் இந்த விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அருகிலுள்ள பாடசாலைகளுக்கும் குறித்த நிலையத்துக்கு சென்று பயிற்சிகளைப் பெறமுடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.( 24 Hour New News)

34வது பாடசாலை விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவம் நேற்று (01) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது. ( 24 Hour New News)

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்..( 24 Hour New News)

சர்வதேச வீரர்களை உருவாக்கும் முதல் கட்டமாக இந்த விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் பாடசாலையிலிருந்து சர்வதேசம் வரை செல்லக்கூடிய வழியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..( 24 Hour New News)

ஞானசார தேரருக்கு வெளியிலிருந்து உணவு – பொதுபலசேனா கோரிக்கை

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது.( 24 Hour New News )




ஞானசார தேரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொதுபல சேனா அமைப்பானது நேற்றைய தினம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )

எந்தநேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார்,

 என்னிடமும் பல தகவல்கள் உள்ளன – பொலிஸ் மா அதிபர்

ஜனதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய விடயம் தொடர்பில் எந்தநேரத்திலும் தான் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )

பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவது தனது பொறுப்பு என தெரிவித்த அவர் இரகசிய பொலிஸார் முன்னிலையில் தனது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படும் என எதிபார்ப்பதாகவும் தெரிவித்தார்..( 24 Hour New News )

குறித்த சம்பவம் தொடர்பில் முன்வைப்பதற்கு தன்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்..( 24 Hour New News )



குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸார் மூலம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் சம்பவத்தின் அடிப்படை காரணிகள் மற்றும் விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..( 24 Hour New News )

பிரதமர் நாளை நோர்வே விஜயம்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார்.( 24 Hour New News )
பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.( 24 Hour New News )



அத்துடன், நோர்வே நாட்டிலிருந்து எதிர்வரும் 6 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழு லண்டன் நோக்கி செல்லவுள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.( 24 Hour New News )

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.( 24 Hour New News )

மலர் மொட்டு கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு – ஜி.எல்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சித் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.( 24 HOUR NEW NEWS)



கொழும்பில் இன்று (01) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.( 24 HOUR NEW NEWS)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கான காலம் கனிந்துள்ளது( 24 HOUR NEW NEWS)

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதில் பிரச்சினையுள்ளது.( 24 HOUR NEW NEWS)

இதன்போது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் ஆபத்து காணப்படுவதாகவும் ஜி.எல்.பீரிஸ்  குறிப்பிட்டார்.( 24 HOUR NEW NEWS)

இது போன்ற ஒரு நிலைமை உருவாகினால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.( 24 HOUR NEW NEWS)

Monday, October 1, 2018

இரண்டு இலட்சம் இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு

இலங்கையைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு கிட்டவிருப்பதாக அமைச்சர் ரிஷாத் பரியுத்தீன் தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )



நட்பு நாடு என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 கோடி அமெரிக்க டொலர்கள் கடன் உதவியாக கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.( 24 Hour New News )

2014, 2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாத்திரம் இலங்கைக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் பெறுமதி 21 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேலாகும்.( 24 Hour New News )

கடந்த வருடத்தில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு இரண்டு கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )

விரைவில் அதிரடி மாற்றங்கள் ! அமைச்சுகள், அரசு அதிகாரிகளில் மாற்றம் .?

நியுயோர்க் விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தீர்க்கரமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார் என அரசியல் உயர்மட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.( 24 Hour New News )



இதில் முக்கியமாக அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.( 24 Hour New News )

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது அது ஆபத்தான கட்டத்தை அடையலாம் என அவர் கருதுகின்றார் எனவும் .( 24 Hour New News )

புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் இந்த அமைச்சரவையில் தயாசிறி ஜயசேகர  ரவிகருணாநாயக்க ஆகியோரிற்கு இடமளிக்கப்படலாம் எனவும் சிறிசேனவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.( 24 Hour New News )

24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

BREAKING NEWS

இலங்கைக்கு மேற்கு மற்றும் தென்மேற்காக அமைந்துள்ள கடற்பரப்புகளில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக இக் கடற்பரப்புகளில் கடும் மழை/இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோ மீற்றர் வரை திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.( 24 HOUR NEW NEWS )



 இயங்குநிலை மேகக்கூட்டமானது அடுத்த சில மணித்தியாலங்களுக்கும் தொடர்ந்து நிலைத்திருக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.( 24 HOUR NEW NEWS )

2018 செப்டம்பர் 30ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் பாணந்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது,( 24 HOUR NEW NEWS )


புத்தளத்திலிருந்து கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.( 24 HOUR NEW NEWS )

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.( 24 HOUR NEW NEWS )

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.( 24 HOUR NEW NEWS )