ஜனதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய விடயம் தொடர்பில் எந்தநேரத்திலும் தான் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவது தனது பொறுப்பு என தெரிவித்த அவர் இரகசிய பொலிஸார் முன்னிலையில் தனது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படும் என எதிபார்ப்பதாகவும் தெரிவித்தார்..( 24 Hour New News )
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸார் மூலம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் சம்பவத்தின் அடிப்படை காரணிகள் மற்றும் விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..( 24 Hour New News )

No comments:
Post a Comment