Tuesday, October 2, 2018

எந்தநேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார்,

 என்னிடமும் பல தகவல்கள் உள்ளன – பொலிஸ் மா அதிபர்

ஜனதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய விடயம் தொடர்பில் எந்தநேரத்திலும் தான் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )

பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவது தனது பொறுப்பு என தெரிவித்த அவர் இரகசிய பொலிஸார் முன்னிலையில் தனது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படும் என எதிபார்ப்பதாகவும் தெரிவித்தார்..( 24 Hour New News )

குறித்த சம்பவம் தொடர்பில் முன்வைப்பதற்கு தன்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்..( 24 Hour New News )



குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இரகசிய பொலிஸார் மூலம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் சம்பவத்தின் அடிப்படை காரணிகள் மற்றும் விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..( 24 Hour New News )

No comments:

Post a Comment