Tuesday, October 2, 2018

மலர் மொட்டு கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு – ஜி.எல்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சித் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.( 24 HOUR NEW NEWS)



கொழும்பில் இன்று (01) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.( 24 HOUR NEW NEWS)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கான காலம் கனிந்துள்ளது( 24 HOUR NEW NEWS)

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதில் பிரச்சினையுள்ளது.( 24 HOUR NEW NEWS)

இதன்போது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் ஆபத்து காணப்படுவதாகவும் ஜி.எல்.பீரிஸ்  குறிப்பிட்டார்.( 24 HOUR NEW NEWS)

இது போன்ற ஒரு நிலைமை உருவாகினால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.( 24 HOUR NEW NEWS)

No comments:

Post a Comment