Friday, April 27, 2018

மடவளையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு.

கண்டி - மடவளை பஸார் தெல்தெனிய வீதி  (ஹுதா பாடசாலைக்கு - முன்னர் நிக்காஹ் ஹோல்) அருகாமையால் செல்லும் பாதையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்  ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.



( 24 Hour New News ) ஜனாப் ஷாமில் அவர்களின் மனைவி பாத்திமா ஷிபானி ( சுமார் 38 வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

( 24 Hour New News ) இன்று வியாழக்கிழமை பகல் வேளையில் பாடசாலை சென்ற இரு பிள்ளைகள் திரும்பி வந்த போது தாயாரை இந்த நிலையில் கண்டவுடன்  வேலைக்கு சென்றிருந்த தந்தைக்கு அழைப்பெடுத்து தெரிவித்துள்ளனர்.( 24 Hour New News )

யக்கஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் சில வருடங்களாக மடவளையில் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் சுமார்  15, 14 வயதுடையவர்கள்.( 24 Hour New News ) 

தற்போது போலீசார் , தடவியல் நிபுணர்கள் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.( 24 Hour New News )