Thursday, April 26, 2018

ஹட்டனில் நில அதிர்வு – 5 வீடுகள் சேதம் (Photos)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 5 வீடுகளில் சேதமடைந்துள்ளன.(24 Hour New News)

24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் காணப்பட்ட 5 வீடுகளிலேயே வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது.(24 Hour New News)


அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு உணர்ப்பட்டதாகவும், பின்னர் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த நபரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(24 Hour New News)


இவ்வாறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிவானந்தன் வயது 40 என தெரியவந்துள்ளது.(24 Hour New News)



இந்த நில அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் என்பன தீடிரென ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.(24 Hour New News)