Friday, November 30, 2018

G.C.E (O/L) சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு முக்கிய வேண்டுகோள்


(எம்.மனோசித்ரா)

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதி பத்திரம் தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding



அனுமதி பத்திரம் இதுவரையில் கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின் அடையாள அட்டை இலக்கத்தை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் Exam admission contact this website www.doenets.lk சாதாரணதர பரீட்சாத்திகளுக்கு முக்கிய வேண்டுகோள்
 என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிட்டு அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இம்மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சை நிலையங்களுக்குள் கணிப்பான்கள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உபயோகிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அவற்றை பரீட்சை நிலையத்தினுள் எடுத்து வருதல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
24 Hour New News & 24 Hour New News World Surrounding

நண்பர்களுடன் பகிரவும்


24 Hour New News

24 Hour New News & 24 Hour New News World Surrounding

No comments:

Post a Comment